ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Sunday, February 2, 2014

நமதூர் அலிப்f மெட்ரிக் பள்ளியில் மிலாது நபி விழா

இன்சாஅல்லாஹ் நமதூர் அலிப்f மெட்ரிக் பள்ளியில் மிலாது நபி விழா நடைபெற உள்ளது அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்...

வழுத்தூர் நான்கு கொடி ஹந்தூரி

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
தஞ்சை மாவட்டம் வழுத்தூரில்
மஹ்பூபே சுபுஹானி மஃசூகே ரஹ்மானி மெய்நிலை கண்ட
ஞானி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதர்
ஜீலானி (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களின் நினைவு நாள்
கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அஸர்
தொழுகைக்கு பிறகு மெளலிது ஷரீப் ஓதப்பட்டது.மக்ரீப்
தொழுகைக்கு பிறகு துவா ஓதப்பட்டு சுமார்
1500படி சாப்பாடு ஆக்கி வழுத்தூர் வாசிகளுக்கு மற்றும்
ஏழைகளுக்கு தப்ருக் வழங்கப்பட்டது. பக்கீர்மார்களின் ராத்தீப்பு மஸ்லீஸ்
உடன். நான்கு கொடி இரவு 10.00 மணிக்கு அரம்பமானது.
நான்கு கொடியினை இளைஞர்கள் வழுத்தூர் உள்ள
அனைத்து வீதிகளின் வழியாக சென்று சுமார் மதியம் 1.00
மணியளவில் நான்கு கொடி வழுத்தூர் முஹைய்யத்தீன்
ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசலில் வந்தடைந்தது. அதன்பின்
கொடியினை ஏற்றி, பாத்திஹா ஓதி தப்ருக் வழங்கப்பட்டது.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் மக்கள் அதிகமாக
கலந்து கொண்டனர்.