
ஹிராக் நாட்டில் இல்மிலும் இபாதத்திலும் சிறந்து விளங்கிய ரிஃபாயி குடும்பத்தில் ஸெய்ஹு மன்ஸூர் இப்னு அபுபக்கர் (ரலி) அவர்கள் ஒரு நாள் கனவு கண்டார்கள் அந்த கனவில் மாமதினா நகரின் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் சில நபிமார்களும் சில அஷ்ஹாபிகளும் சூழ்ந்த சபை நடுவில் தாஹாநபி(ஸல்) அவர் வீற்றிருக்கக்கண்டார் மேலும் நாயகம் (ஸல்) அவர்கள் தனது வலது கையை ஒரு சிறூவரின் தலைமீது வைத்து கொண்டிருன்தார்கள்