ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Tuesday, February 9, 2010

சர்குரு மிஸ்கின்ஷா வாழ்க்கை வரலாறு

தாத்தே துணை

குருவருளே குதாவினருளென
குணங்கொண்கொண்ட கனவான்களெ
சாந்தியும் சமாதானமும் நிகழட்டும்
அண்ணலெம் பெருமான் ஸல்லலாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்களின் மூன்றாம் குறிப்பான வாஹிதியத் தெனும் வழிதொடரில் இருலோக ஸர்தார் ஸெய்ஹனா முஹ்யித்தீன் அப்தில் காதிரில் ஹசனி(ரலி) அவர்களின் காதிரிய்யா பீர் தரிக்காவிலும் ஸெய்ஹனா அஹமதுல் கபீர் ரிஃபாஇ ஹுஸைனி (ரலி) அவர்களின் முர்ஸத் தரிக்காவிலும் பாரம்பரியத்தில் வாழையடிவாழை போல் பல தலைமுறைகளாக மன்னர் சோழர் சாம்ராஜ்ஜியதின் எல்லயை சார்ந்த இனாம் வழுத்தூர் என்ற சிற்றூரில் வாழ்ந்து வந்த ஹபிப் முஹமத் என்ற தந்தைக்கும் ஆபிதா என்ற அம்மையார்க்கும் புதல்வராக 01-05-1956 ஆம் ஆண்டு வியாழன் அன்று சுபுஹுக்குபின் பிறந்தார்கள் இவர்கள் தாம் ஸற்குரு.கலைஞானி அப்துல் ஹலீம் எனும் மிஸ்கின்ஷா அவர்களின் வாழ்வின் சில பக்கங்கள்
தாய்வழி
இவர்களின் தாய்வழி பாட்டனார்கள் பக்கீர்களாய் யோகிகளாய் வீரர்களாய் மஸ்தான்களாய் வாழ்ந்தவர்கள் இன்றும் இவர்கள் பிறந்த வீட்டை மஸ்தான் வீடு என்றே பெயர் சொல்லி அழைப்பார்கள் இந்த வம்சத்தில் சில பெண் வலிமார்களும் உண்டாகி இருக்கிறார்கள்
தந்தைவழி
இவர்கள் மலேசியா நாட்டில் மலாக்கா என்ற பகுதியில் வாழ்ந்த குடிமக்களாவர்கள் இவர்களும் காதிரியா ரிஃபாயிஆ தரிக்காவின் ஸெய்ஹுமார்களாய் ஞானியர்களாய் பாவலர்களாய் புலவர்களாய் தமிழில் ஆயிரக்கணக்காண ஆன்மிக கேள்வி பதில் லாவனி பதன்களை இயற்றியும் பாடியும் தரிக்காவை நாடுகள் தொறும் சென்று வளர்த்து இருக்கிறாற்கள் எப்படி என்றால் இவர்கள் வணிகர்களாய் இருந்தபடியால் அப்பணி அவர்களுக்கு சிரம்மானதக யில்லாமல் இளகுவாய் இருந்தது.இப்படி உலகின் பல பகுதிகளுக்கும் சென்று வருவதினால் பல மொழிகளை நன்கு பேசும் ஆற்றல் பெற்றிருந்தார்கள் அவர்களாள் இஸ்லாம் வழியை மக்களுக்கும் மாக்களுக்கும் அன்புடனும் எடுத்துக்கூற சிரமம் இருந்ததில்யை இப்படியான குலத்தில் அயிந்தாம் தலை பாட்டனாரில் ஹபிப் முஹமத் எனும் வணிகர் அவர்கள் வாணிபம் செய்ய நாகப்பட்டினம் வந்து சில நாள் தங்க மயிலாடுதுரை சமிபமாக இருக்கும் அறங்குடி எனும் ஊரில் நிக்காஹு செய்து அங்கேயே தங்கி தன் பணியை செய்த்தும் தீன் பணி செய்தும் வாழ்ந்த இவர்களுக்கு நான்கு ஆண்மக்கள் அதில் நெய்னார் முஹமத் என்பவர் மட்டும் நல்ல கல்விஞானதிலும் ஆன்மிக சற்குருவாகவும் இருந்தவர்களாக இருக்கும் இவர்களுக்கும் நான்கு ஆண்மக்கள் பிறந்ததில் அதில் ஒருவர் ஆதம்ஷா என்பவர் மட்டும் சற்குரு ஆன்மிக பெரியவராக வாழ்ந்த இவர்களுக்கும் நான்கு ஆண்மக்கள் முஹம்மது காஸிம் என்ற இவர்கள் புலவராகவும் ஞானியாகவும் நல்ல கல்வி பெற்றவராகவும் இருந்து குலதொழிலான வாணிபம் செய்து சிங்கப்பூர் மலேஷியா இந்தொனேசியா போன்ற நாடுகளுக்கு செல்பவராகவும் இருந்த இவர்களுக்கும் நான்கு ஆண்மக்கள் இதில் ஒருவர் ஹபிப் முஹமத் என்றும் ஹபிபுல்லா இவர்கள் வீரம் விவெகம் ஆன்மிகம் சற்குரு இப்படியான தரிக்காவில் தீன் பணி செய்து வந்த இவர்களுக்கும் நான்கு ஆண்மக்கள் இதில் ஒருவர்தான் நமது ஞானகுருவாகவும் சற்குருவாகவும் தீன்பணி ஆற்றி வரும் கவிஞர்.பாடகர்.கலைஞானி அப்துல் ஹலீம் எனூம் மிஸ்கின்ஷா ஆவார்கள்.இவர்களுக்கும் நான்கு ஆண்மக்கள் உள்ளனர் இவர்களில் அல்லாஹ் யாருக்கு அந்த நசிபை வைத்திருக்கின்றானொ எல்லாம் அவனெ அறிவான் இன்னும் முர்ஸத் அப்துல் ஹலீம் இந்திய அரசின் வீரக்கலைக்க்கு பயிற்சி ஆசிரியராக அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கபட்டு பல ஊர்களிலும் சென்று நிகழ்ச்சிகள் செய்து பரிசும் பாராட்டும் சான்றிதழ்கலும் பெற்றதுமில்லாமல் கலைஞானி என்ற விருதும் பெற்றவர்கள்
பைஅத்-கிலாஃபத்
கேரளாவைச் சார்ன்த அழகிய மனவாழபுரம் எனும் சிற்றுரில் ஸெய்யத் ஸுலைமான் ஹலிமா பீவி என்ற தம்பதினருக்கு ஞான.மகனாய்.பிறந்த முஹம்மது இப்ராஹிம் எனும் செய்யத் மஹபுபுல்லாஷா காதிரி ரிஃபாயி எனும் வலியுல்லாஹ் இடம் ஃபக்கிர் பைஅத் பெற்று அவர்களிடம் சில ஆண்டுகள் மலைவாசம் செய்து த.ஸ்ஸவ்பு.இஸ்மு.யோக.இல்மும் வாசிக் கலையும் பயின்ற எளிமையும் பணிவும் அன்பும் கொன்டவர்களாகா சிறப்புடன் தீன் பணி செய்து வருகிறார்கள்.
மேலும் காரைக்கால் ஸெய்யத் அப்துல்லாஹ்.ஸர்.கலிஃபா அவர்களிடம் ஃபவுஜ்தார்.கிலாஃபத்தும் பெற்று ஸற்குரு வாய் ஆனார்கள்.
ஞான குரு வழித்தொடர்
இவர்களின் குரு மஹபுபுல்லாஷா அவர்கள் தென்காசி ஸெய்யத் ஸுலைமான்ஷா அவர்களிடம் பைஅத்தும் கிலஃபத்தும் பெற்று செய்யத் மீம் மஷ்தான் அவர்களிடம் 18ஆண்டும் பொதிகை மலைவாசத்தில் ஞானபயிற்ச்சி பெற்ற இவர்கள் அடக்கஷ்தலம் அடியாக்கமன்களம் என்ற ஊரில் உள்ளது.தர்ஹா கட்டி உருஷ் எடுத்து வருகிறாறகள்.
ஸெய்யத்.மிஸ்கின்ஷா.காதிரி.ரிஃபாயி ஃபவ்ஜ்தார் இவர்களின் ஸெய்ஹு
ஸெய்யத்.மஹபுபுல்லஷா காதிரி ரிஃபாயி கலிஃபா இவர்களின் ஸெய்ஹு
ஸெய்யத்.ஸுலைமான்ஷா காதிரி ரிஃபாயி இவர்களின் ஸெய்ஹு
ஸெய்யத்.கரிமுல்லஷா காதிரி ரிஃபாயி இவர்களின் ஸெய்ஹு
ஸெய்யத்.ஆரிஃபுல்லாஷா காதிரி ரிஃபாயி இவர்களின் ஸெய்ஹு
செய்யத் ஹாஷிம் பஹ்தாதி இவர்கள் உடன்குடி என்ற ஊரில் நல்லடக்கம் மாகி ஒட்டாஷ் அப்பா என்ற பெயரில் மிக பிரசித்தி பெற்ற வலியுல்லாஹ்வாய் திகழ்கிறாற்கள் என உண்மையுடன் தொகுத்துயளிபோன்.