ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Saturday, May 14, 2011

அஹ்லெ சுன்னத் ஜமாஅத் கொள்கை விளக்க கூட்டம்!


கடலூர் மாவட்டம் கிள்ளை நகரில் தமிழ்நாடு மஜ்லிஸ்உலமாயே அஹ்லெ சுன்னத் சார்பில் சுன்னத் ஜமாஅத் கொள்கை விளக்க கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வருகிற   15-05-2011 ஞாயிற்றுக் கிழமைஅன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை  மௌலானா மௌலவி அஷ்ஷெய்கு எஸ்.எம்.ஹைச். சைபுத்தீன் ஆலிம் ரஹ்மானி பாகவி காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள் தலைமையின் கீழ் மௌலானா மௌலவி குஷ்தர் ரப்பானி சாஹிப் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறுகிறது. ஆர்.எஸ். திருமண மண்டபம், வடக்கு மெயின் ரோடு, கிள்ளை(சிதம்பரம்)  உலகளாவிய தர்காக்களின் புகைப்பட கண்காட்சியும்,நாகூர் ஆண்டவர்களின் கந்தூரியை முன்னிட்டு பாத்திஹா ஓதி தபர்ரூக் வழங்கப்படும்.  பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

மௌலானா மௌலவி காஜா முஹ்யித்தீன் ரப்பானி ஹஜ்ரத், மௌலவி ஜஃபர் சாதிக் நூரி ஹஜ்ரத்,மௌலவி முப்தி அலி ஹஸன் நூரி,மௌலவி அப்துல் கரீம் காதிரி, மௌலவி அஷ்ஷெய்கு சையத் வஜீஹுன்னகி சகாப் ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். Thanks To sufimanzil.org

17-05-2011 அன்று வழுத்தூரில் மெய்ஞான திருவிழா

அஸ்ஸலாமு அலைக்கும்
                                                          இன்ஷாஅல்லாஹ் வருகிற ஜமாதுல் ஆஹிர் பிறை 14 17-05-2011 செவ்வாய்கிழமை அன்று குதுபுல் அக்தாப் ஆத்மிக பெரும்ஜோதி அஸ்ஸெய்ஹீ ஷா முஹமது (ரலி) அவர்களின் வருடாந்திர ஹந்தூரி நடைபெறயிருகிறது அது சமயம் அஸர் தொழுகைக்கு பிறகு மௌலுது ஷரிஃப் ஒதப்பட்டு மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு ரிஃபாயி ஜமா ஃபக்கிர்மார்களால் ராத்திபு நடைபெரும் பின்பு தஹஜ்ஜத் தொழுகைக்கு பிறகு எஜமான் அவர்களின் புனித மஜார் ஷரிஃப்க்கு சந்தனம் பூஷப்படும். உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் ஹந்தூரியில் கலந்து கொண்டு து.ஆ பரக்கத் பெருமாறு அன்புடன் அழைகின்றோம்




                                                         இப்படிக்கு

                             அஹ்லே சுன்னத்வல் ஜமாத் இளைஞரனி

                                                           வழுத்தூர்

Saturday, May 7, 2011

நாகூர் ஆண்டவர் அவர்களின் 454ம் ஆண்டு உருஸ்

அஸ்ஸலாமு அலைக்கும் வருகிற 13-05-2011 அன்று வெள்ளிகிழமை மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு விலாயத் வேந்தர் தென்னகத்து பாதுஷாவாம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது கன்ஜே ஷவாய் கன்ஜே பக்ஸ் நாகூரி அவர்களின் 454வது வருடாந்திர ஹந்தூரி நடைபெற இருக்கிறது அது சமயம் வருடாந்திர சந்தன கூடு வைபவத்தில் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து.ஆ பெருமாறு அன்புடன் அழைகின்றோம்