ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Friday, January 22, 2010

ஞானரத்தினக் குறவஞ்சி!

ஞானரத்தினக் குறவஞ்சி
************************************
1.”ஆதிக்கு முன்னம நாதியு மென்னடி சிங்கி?
அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா.”
ஆதி = ஆ(ன்மா) + தீ(வெப்பம்)
அநாதி = அந்(த)+ ஆதி = அந்தாதி
கரு = எண்ணம், நினைவு, சலனம்
ஆதியாகிய இறைக்கு முன் அநாதி என்பது என்னடி சிங்கி?

அந்தஎண்ணம், சலனம் ஆகியவை தோன்றுமிடமாகிய தலைக்குள்ளே
இருக்கும் கருக்குழிக்கு உள்ளே இருக்கும் இருட்டு அறைதான் சிங்கா!
2. “ஆதியாய் வந்த அரும்பொரு ளேதடி சிங்கி?
சோதியி லாதி சொரூபா யெழுந்தது சிங்கா”
ஆதியிலே வந்த அரிய பொருள்என்னவெனில் சோதியில் ஆதி சொரூபமாம் விந்துவேயாம் .
3.”சோதியி லாதி சொரூபமான தெப்படி சிங்கி? – அது
வேதமாம் முப்பொரு ளொன்றாய் முடிந்தது சிங்கா!”
அதுஎப்படி ஆதி சொரூபமானது சிங்கி?
பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளும் ஒன்றாய்ச் சேர்ந்த ஆன்மாவைப்
படைக்கும். ஆன்மா வேதமாம் அறிவை அடையும்.
4.”முப்பொரு ளென்று நீமுன் சொன்ன தாரடி சிங்கி? – அவர
அப்பனு மாயிர மாதியாம் நாமடா சிங்கா!”
முப்பொருளென்று முன்னே சொன்னது யாரடி சிங்கி?
பதி,பசு,பாசம் கூடிய அப்பனும், ஆயியும் ஆயிரம் உயிருக்கு ஆதியாம் நாம்
தானடா சிங்கா.
5.”எப்படி யுலகில் இப்படி யுருவானோம் சிங்கி? – அது
அப்பன் தன் னட்புக்கு ஒப்பியதாலே சிங்கா!”
எப்படி உலகில் இப்படி உருவானோம் சிங்கி?

அப்பனும் ஆயியும் நட்பினால் இணைவவதற்கு ஒப்பியதாலே சிங்கா.
6.”பராப ரத்தினிற் பஞ்சவ னமேது சிங்கி? – அது
வேராகித் தூரான விந்து நிறமடா சிங்கா!”
இந்த உலகினில் ஐந்து வர்ணம்எது சிங்கி?
அது வேராகி, தூரான, ஆதியான விந்துவின் நிறமடா சிங்கா.
7.”ஒன்றுக்குள் ஐவர் உண்டான தெப்படி சிங்கி? – அது
ஒன்றோடே ஒன்றாக ஓடி இணைந்தது சிங்கா.”
ஒரு உடலினுள் ஐம்பூதங்கள் உண்டானது எப்படி சிங்கி?
அவைகள் ஒன்றோடு ஒன்றாக ஓடி இணைந்ததால்தான் உருவாகிய ஒன்று
உடலானது சிங்கா.
8.”மூலக் குகைக்குள்ளே முச்சுடரே தடிசிங்கி? – அது
நாதத்தி லைம்பூதம் நன்பா யுதித்தது சிங்கா!”
ஐம்பூதங்களையும் அடக்கி விந்து நாதத்தில்ஏற்றினால் அதுதான் மூல(கபால)க் குகைக்குள்எரியும் சூரிய, சந்திர, அக்கினி கலைகளல்ஏற்படும் முச்சுடரே
9.”மூலக்கிழங்கு முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? – அது
நாதத்திலான நடுநிலையல்லவோ சிங்கா!”
மூலக் கிழங்கு (விந்து) முளைக்குமிடம் எங்கே சிங்கி?
அது விந்து நாதத்தின் நடு(ப்பகுதி) நிலை அல்லவோ சிங்கா. அதுவே
கபாலத்தின் நடுப் பகுதி. ஐம்புலன்களிருந்தும் உள்புறமாகக் கோடுகள்
வரைந்தால் அது உள்நாக்குப் பக்கத்தில் வெட்டும். அந்த இடம்தான் சிங்கா.
10.”மூலக் குகையெனுங் கோட்டைக் கரசர் யார்சிங்கி? – அது
முப்பொருள் ஒன்றாய் முடிந்த நினவடா சிங்கா!”
கபாலக் குகையெனும் மூலக்குகைக்கு அரசர் யாரடி சிங்கி?
பதி, பசு, பாசம் ஆகிய மூன்று பொருட்களும் ஒன்றாய் இணைந்து முடிந்த
“நினைவு” தான் அது சிங்கா.

11.”முன்னே முளையாய் முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? – அது
மூளை முனையிரு கண்ணிக ளல்லவோ சிங்கா!”
முதன் முதலில் முளையாய் முளைத்த இடம்எது சிங்கி?

மூளையின் முனையில் கண்ணிகளாய்த் தொங்கிகொண்டிருக்கும்
கண்களடா சிங்கா.
12.”முன்னே யுருவாய் முடிந்திட மெவ்விடம் சிங்கி? – அது
பெண்ணாணு மாகப் பிறந்த தலமடா சிங்கா!”
உருவாகி உடலெடுத்து முடிந்தது எவ்விடம் சிங்கி?

பெண்ணும் ஆணுமாய் பிறக்கும்போது வெளிவரும் இடமடா
(தலமடா) சிங்கா.
13.”இந்த வுடலுக்கு வேரென்ன தூரென்ன சிங்கி? – அது
இந்த வுடலுக் குயிராதி மூலமே சிங்கா!”
இந்த உடலுக்கு ஆரம்பமும் முடிவுமென்ன சிங்கி?

இந்த உடலுக்கு உயிர் ஆதிமூலமே (விந்து சக்தி) சிங்கா.
14.”இந்த வுடலுக் குயிர்வந்த தெப்படி சிங்கி? – அது
தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியடா சிங்கா!”
இந்த உடலுக்கு உயிர் வந்ததுஎப்படி சிங்கி?
அம்மையின் வயிற்றின் நடுக்குழியா தொப்பூழ் கொடி வழி வந்ததடா
சிங்கா.
இதன் வழியாக அன்னையின் வயிற்றினுள்ளே பரிபூரணமாயிருந்தது
பிண்டம் மட்டுமே. குழந்தையாக வெளிவந்தவுடன் அன்னையின்
தொப்பூழ் கொடியின்மூலம் அடிக்கும் சிவ்வென்ற மூச்சுக் காத்துதான்
குழவிக்கு உயிர்.
இதை எவ்வளவு எளிதாக விளக்கியுள்ளார் பீரு முகமது அவுலியா.
15.”இந்த உடலுக்கு உயிரெங்கே நின்றது சிங்கி? – அது
அந்தர மாயண்டமாக்கொடி யல்லவோ சிங்கா!”
இந்த உடலுக்கு உயிர்எங்கே நின்றது சிங்கி?
அந்தரத்தில் தொங்கும் முட்டையையும் குழந்தையையும் பிணைக்கும்
கொடி அல்லவோ சிங்கா.
16.”இந்த வுடற்கனி எந்தக் கொடிக்கனி சிங்கி? – அது
முந்திய கொப்பூழு மாக்கொடி யல்லவோ சிங்கா!”
என் உடல்எந்த கொடியின் கனி சிங்கி?
இது முந்திய(உன்தாயின்) கொப்பூழு கொடிதான் சிங்கா.
17.”மாக்கொடி யென்பதை மானிடர்என்சொன்னார் சிங்கி?
மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!”
மாக்கொடி(தாயின் கொப்பூழ் கொடி) யென்பதை மானிடர் என்ன
சொன்னார் சிங்கி?
கட்டுக்கு அடங்காத நஞ்சுக் கொடிஎன்றார் சிங்கா.
“மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!”
இதை “மட்டிலடங்காத மா “கலிமா” வடா சிங்கா!”எனக் கூறுவோரும்
உண்டு.
கலிமா :
“லா இலாஹ இல்லல்லாஹூ – முஹம்மதுர் ரஸுலுல்லாஹி.”
18.”எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி? – அது
எல்லா முடிந்த பொருள்வழி யாமடா சிங்கா!”
எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி?
அது எல்லா முடிந்த பொருள்வழியாம் (செய்த வினைகளுக்குத்
தக்கவாறு) இந்த உலகினில் வந்தோமடா சிங்கா.
19.”முன்னே அறிவால் அறிவகை என்னடி சிங்கி? – அது
முன்சுடர் மூன்று முடலுயி ராத்துமா சிங்கா!”
அறிவை அறியும் வகைஎன்னடி சிங்கி?
சூரிய, சந்திர, அக்கினிச் சுடர் மூன்றும் சேர்ந்த உடல் உயிர்
ஆத்துமாவால் அறியலாம் சிங்கா.
20.”பின்னே ரறிவர்க ளொன்றான தெப்படி சிங்கி? – அது
பேதகமற்ற பெருவெளி யானது சிங்கா!”
அறிவை உணர்ந்த பின்னே அறிவர்கள் ஒன்றானதெங்கே சிங்கி?
பேதமேயில்லாத சிதாகாசப் பெருவெளியில் சிங்கா.


21.”ஆசைகொண் டுநம்மை யாட்டுவா ராரடி சிங்கி? – அது
அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா!”
ஆசைகொண்டு நம்மை இப்படி ஆட்டிப் படைப்பவர் யாரடி சிங்கி?
ஐம்புலன்களில் ஆகாயம் தவிர எஞ்சி நிற்கும் அக்கினி, வாயு, நீர்,
மண் ஆகியவைதானடா சிங்கா!”
22.”ஆசைபா சப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி? – அது
அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா!”
ஆசை, பாசம் முதலியவைகளின் பலன்களை அனுபவிப்பது
(அனுபோகம்) யாரடி சிங்கி?
மண் தத்துவத்தாலாகிய அங்கங்கள் பொருந்திய உடல்தானடா
சிங்கா.
23.”தன்னை அறியுந்தலமேதடி சொல்லடி சிங்கி? – அது
கண்ணிடையான நடுநிலை யல்லவோ சிங்கா!”
தன்னை அறியும் தலம்(இடம்) எதடி சிங்கி?
கண்களிடையேயான ஐம்புலன்களும் சந்திக்கும் இடமேதானடா
சிங்கா.
24.”என்னவிதமாகத் தன்னையறிவது சிங்கி? – அது
தன்னவன் றாய்தந்தை யாகிநா மானது சிங்கா!”
தன்னையறிவது எப்படி சிங்கி?
தன்னுடைய தாய் தந்தையையும் ஆகி, நாமுமாகிய விந்து தானது
சிங்கா.
25.”இறையை அறிவதிங் கெப்படிச் சொல்லடி சிங்கி? – அது
இறையெங்கு நின்றாடுந் தன்நினை வாகுமே சிங்கா!”
இறையை அறிவது எப்படி சிங்கி?
இறை எங்கும் நின்றாடும் தன்னுடைய நினைவுதானடா சிங்கா!
26.”என்னுள் விளங்குந் தவமென்ன சொல்லடி சிங்கி? – அது
தன்னை மறந்து தவத்தி லிருப்பது சிங்கா!”
தவம் என்றால் என்னடி சிங்கி?
உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும் மற்றவற்றையும்
மறந்து இருப்பதுதான் தவம்.
27.”என்னவிதமாகத் தன்னை மறப்பது சிங்கி? – அது
ஒன்றைப் பொருந்தி ஒடுங்கியிருப்பது சிங்கா!”
தன்னை மறப்பது எப்படியடி சிங்கி?
நினைவில் உணர்வை ஒன்றினால் மனமடங்கும். அந்த ஒடுக்கம்
தன்னை மறக்கச் செய்யும் சிங்கா.
28.”என்னவிதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி? – அது
எல்லாம் மறந்து இருளா யிருப்பது சிங்கா!”
ஒன்றைப் பொருந்தும் வழி என்னடி சிங்கி?
எல்லாவற்றையும் மறந்து இருளில் மூழ்கி இருப்பது சிங்கா.
29.”ஒன்றென்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி? – அது
உன்னா லுதிப்பல முன்னால் நினைவடா சிங்கா!”
ஒன்று என்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி?
உயர்நிலை நினைவுதானடா சிங்கா.
30.”கன்னி யெழுந்து கலந்திடம் எவ்விடஞ் சிங்கி? – சில
முன்னியெழுந்த உயிர் நிலை யல்லவோ சிங்கா!”
வாலைக் குமரியாம் மனோன்மணி எழுந்து கலந்தது எந்த இடம் சிங்கி?
அது முதன்முதலில் உதித்த உயிர்நிலையே சிங்கா.


31.எங்கும் பரந்த பெரும் பொருளென்னடி சிங்கி? – அது
அங்கிங்கு மெங்குமாய்க் கண்ட பெருவெளி சிங்கா.
எங்கும் பரந்த பெரும் பொருள் என்னடி சிங்கி?

அது அங்கு, இங்கு எங்குமாய்ப் பரந்த சிதாகாயப் பெருவெளி சிங்கா!
32.அண்ணிணு மெண்ணம் அழியாப் பொருளென்ன சிங்கி – இரு
கண்ணையு மூட இருளழி யாப்பொருள் சிங்கா!
எண்ணமாகிய நினைவு கிட்டினாலும் அழியாத பொருள் என்னடி சிங்கி?

அது கண்களை மூட இருக்கும் இருள்தானடா சிங்கா!
(கன்ஸூல் மஹபியா)
33.ஆங்கார வுடலுக்கு ஆணியா னென்னடி சிங்கி? – அது
ஓங்கார மூலத்தின் உள்ளொளி யல்லவோ சிங்கா!
ஆங்காரம் நிறைந்த உடலுக்கு ஆதாரம்(ஆணி) என்னடி சிங்கி?

அது பிரணவமாம் ஓங்கார மூலத்தின் உள்ளே இருக்கும் ஒளியே
சிங்கா!
34.ஆணியாய் வந்த அரும்பொரு ளென்னடி சிங்கி? – அது
தோணிய சற்குரு முதனாம மல்லவோ சிங்கா!
ஆதாரமாய் வந்த அரும்பொருள் என்னடி சிங்கி?

தோன்றிய சற்குருவின் முதல் பெயரல்லவோ(சீவ) சிங்கா!
35.இந்தப் பொருள் வந்த தெந்த வழியடி சிங்கி? – அது
அந்தக் கதிமதி வந்த வழியடா சிங்கா!
கதி = பிறப்பு; மதி = அறிவு.
இந்த சீவன் வந்தது எந்த வழியடி சிங்கி?

அந்த அறிவு பிறந்து வந்த வழியடா சிங்கா!

Thursday, January 14, 2010

Sunday, January 10, 2010

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்


சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.
இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.
”சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.”
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.
இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,
”பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது” என்று கூறினார்.
ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.
கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,
மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல.”
இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..
”இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்” இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.
இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்..
”புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்.”
என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.
பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ”இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?” என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.
ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள். இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.
அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். ‘பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?
வந்தவர்கள் பதில் சொல்லும் போது ”மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை” என்றார்கள்.
வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ”மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப் பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது” என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.
அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் ‘சகோதரர், சகோதரிகளே..!” என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.
இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.
”என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாத இந்தியாவாகத் திகழும்.”
இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..!
விவேகானந்தரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்ற மார்க்கம் சமத்துவம் மற்றும் அன்பு மயமானது. அது ஆக்கிரமிப்பு மதம் அல்ல
பதிந்தது நேசமுடன் இஸ்லாம்.
நன்றி : மதுக்கூர் இராமலிங்கம்