ஆத்மிக பாதை


மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு“
எவன் ஒருவன் தன்னையறிந்தானோ அவன் தன்னுடைய ரப்பாகிய இறைவனை அறிந்து கொண்டான்“
>அஸ்ஸலாமு அலைக்கும்.............

Sunday, October 27, 2013

ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் அவர்களின் புனித பொருட்கள்





தீனுக்கு உயிர் கொடுத்து, மக்களின் மனங்களை உயிர்ப்பித்த குத்துப்புல் மஜீத் வல் பர்துல் வஹீத் காரணக்கடல் ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் அவர்களின் பாவனையில் இருந்தவைகள்.

Tuesday, July 30, 2013

ஜமா fபக்கிர்மார்கள்

ஜமா fபக்கிமார்கள் வழுத்தூர் வருகை,எப்பொழுதும  போல ் இந்த வருடமும் நோன்புக்கு முன்னால் வருகை தந்து து.ஆ செய்து விட்டு சென்றாற்கள்...

Wednesday, May 8, 2013

அவ்லியாக்கள் என்றும் உயிருடன் வாழ்பவர்கள்


அல்லாஹூ அக்பர்.........அல்லாஹூ அக்பர்........அல்லாஹூ அக்பர்.....இஸ்லாதை இழிவு படுத்த நினைப்பவர்களே...இஸ்லாமியே போர்வையில் வாழ கூடிய தேவ்பந்து தப்லீக் தவ்ஹீத் வஹ்ஹாபிகளே....சத்தியம் வந்துவிட்டது..அசத்தியம் அழிந்து விட்டது,,சத்தியம் வந்தே தீரும்....என்ற குர் ஆன் வசனத்திர்க்கு ஏற்ப 1400 வாருடங்களிட்கு முன் "ஹஜர் பின் அதி" ரலியல்லாஹு அன்ஹு என்ற சஹாபியின் சியாரம் சிலநாட்களிட்கு முன் சிரியாவில் உள்ள வஹாபி சலபிகளின் காட்டு மிராண்டித்தனமான வேலையின் போது குறித்த (சியாரத்) கப்ரில் உள்ள சஹாபியை வெளியே எடுத்த போது எடுக்கப்பட்ட காட்சி...யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத அத்தாட்சி...இறை நேசர்களின் புனித உடம்பை மண் திண்பதில்லை..வஹாபிகளே உங்கள் அஹக்கண்ணை திறந்து பாருங்கள் .... இது உங்கள் புறக்கண் களுக்கு காட்டிவிட்டது..
                                       எனது தோழர்களை விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். எனது தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். எனக்குப்பின் அவர்களை உங்களது பேச்சுக்கு ஆளாக்கிக்கொள்ளாதீர்கள். எவர் அவர்களை நேசிக்கின்றனரோ அவர் என்னை விரும்புவதாலேயே அவர்களை நேசம் கொண்டார். இன்னும் அவர்களைகோபிப்பவர்கள் என்னைக் கொபிப்பதாலேயே அவர்களைக் கொபித்தனர். அவர்களுக்கு நோவினை செய்வோர் என்னையே நோவினை செய்கின்றனர். எவன் என்னை நோவினை செய்வானோ, அவன் அல்லாஹ்வை நோவினை செய்தவனாகும். அல்லாஹ்வை நோவினை செய்பவன் சமீபத்தில் வேதனை அளிக்கப்படுவான். எனத்திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மொழிந்தார்கள். 
ஹஸ்ரத் அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலியல்லாஹு அன்ஹு) - திர்மிதி, மிஷ்காத்,
                                                                       கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: 
"எனது தோழர்களை எவரேனும் ஏசப்பேசக் கண்டால் (அல்லது கேட்டால்) இந்தக்கெடுதிக்காக அல்லாஹ்வின் சாபம் அவர்கள்மீது உண்டாகட்டும் எனச் சொல்லுங்கள். 

ஹஸ்ரத் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) 
திர்மிதி, மிஷ்காத்
                                                                                  

Friday, May 3, 2013

ரிபாயி ஜமா ராத்திபு மஜ்லிஸ்

சற்குரு அப்துல் ஹலீம் ரிபாயி உடன் fஅக்கிர்மார்கள் மற்றும் ஜமாத்தார்கள்..







Saturday, February 16, 2013

ரிபாயி நாயகம் வரலாற்று நூல்

இன்ஷா அல்லாஹ் விரைவில் சுல்தானுல் ஆரிfன் குத்புல் அக்தாப் அஹ்மத் கபிர் ரிfஆயி நாயகம் பற்றிய ஆத்மிக வரலாற்று நூல் ருகையா பதிப்பகம் சார்பில் வெளியிடப்படும்...அனைவரும் து.ஆ செய்யும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்....